ABOUT AMBAL
இவ்வூரின் அருகில் உள்ள தண்டந்தோட்டத்தில் ஸ்ரீசிவபெருமான் நர்த்தனம் ஆடியதாகவும், அது சமயம் அவருடைய கால் சலங்கை மணி அறுந்து பூமியில் விழும் தருணத்தில் அந்த மணி பூமியில் விழாமல் ஸ்ரீஅம்பாள் தன்னுடைய முந்தானையில் வாங்கிக் கொண்டதால் அம்பாளுக்கு ஸ்ரீசிந்தாமணி அம்பிகை என்றும், அந்த மணியை சிவபெருமான் கண்டதால் சிவபெருமானுக்கு ஸ்ரீமணிகண்டேஸ்வரர் என்றும், மீண்டும் அந்த மணியை முழுமுதற்கடவுளாகிய விநாயகர், சிவபெருமான் காலில் கட்டி விட்டதால் அந்த விநாயகருக்கு ஸ்ரீமணிகட்டி விநாயகர் (முருக்கங்குடி தண்டந்தோட்டம் சாலையில் உள்ளது.) என்றும், ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகளால் பெயர் சூட்டப்பட்டதாகவும் வரலாறு. ஸ்ரீசுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் சிவபெருமானை நோக்கி வணங்கியவண்ணமாக இந்த ஆலயத்தில் உள்ளார்.
ஸ்ரீமணிகண்டேஸ்வர சுவாமியின் வடபாகத்தில் ஸ்ரீசிந்தாமணி அம்பாள் வீற்றிருப்பதால் இந்த ஆலயத்தில் திருமணம், ஷஷ்டி அப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்து கொண்டால் எமபயம் நீங்கி நீண்ட ஆயுளுடன் எல்லா வகையான செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது திண்ணம். |
 |
சிந்தாமணி என்றாலே எல்லா நவரெத்தினங்களையும் அணிந்து நவக்கிரஹதோஷத்தை நீக்குபவர் என்று பொருள்.
ஸ்ரீசிந்தாமணி அம்பிகையை ஆடி வெள்ளி, தை வெள்ளி, பௌர்ணமி, நவராத்திரி தினங்களில் வழிபட்டால் அஷ்டலெக்ஷ்மி கடாட்சம் பெற்று வாழ்வில் அனைத்து நன்மைகளும் பெற்று சிறப்புற வாழலாம்.
இங்கு தல விருட்சம் : வில்வம்
ஸகல காரிய ஸித்திக்கான எளிய முறை சுலோகங்கள்
செல்வம் மேன்மேலும் வளர :
அநர்க்க ரத்ந ஸம்பூர்ணோ மல்லிகா குஸும ப்ரிய :!
தப்த சாமீ கராகாரோ ஜித தாவா நலாக்ருதி :!!
அடுத்தடுத்து வரும் ஆபத்துகள் நீங்க :
சிந்தாகசோக ப்ரசமநோ ஜகதாநந்த காரக :!
ரஸ்மிமாந் புவநேஷஷ்ச தேவாஸுர ஸுபூஜித :!!
வித்தையில் வல்லவனாக :
வர்த்திஷ்ணுர் வரதோ வைத்யோ ஹரிர் நாராயணே ரச்யுத :!
அஜ்ஞாநவந தாவாக்நி :ப்ரஜ்ஞாப்ராஸாதா பூபதி :!!
நினைத்த காரியம் நிறைவேற :
சிந்தாமணி : ஸுரகுரு : த்யேயோ நீராஜநப்ரிய :!
கோவிந்தோ ராஜராஜேஸோ பஹு புஷ்பார்ச்சநப்ரிய :!!
பெண் , பிள்ளை கல்யாணம் நடைபெற :
கல்யாணரூபா : கல்யாண : கல்யாணகுண ஸம்ஸ்ரய :!
ஸுந்தரப்ரூ : ஸுநயந : ஸுலலாட : ஸுகந்தர :!!
புகழ் ஓங்க :
வாமாங்கபாக விலஸச் ச்யாமலா வீக்ஷணப்ரிய :!
கீர்த்யாதார : கீர்த்திகர : கீர்த்திஹேது ரஹேதுக :!! |
 |
அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி அம்பாள் , அருள்மிகு ஸ்ரீ மணிகண்டேஸ்வரர் ,அருள்மிகு ஸ்ரீ அய்யனார் (தர்ம சாஸ்தா) ஆகியோரை வழிபட்டு, தங்களது தோஷங்களும், அறியாது செய்த பாவங்களும் நீங்கி, எல்லா வளங்களும் பெற்று இறவாத இன்பமும் , அன்பும் எய்தி வாழ்வாங்கு வாழ வாருங்கள். |