SRI NADAR IYYANAR
ஸ்ரீ அய்யனார் (தர்ம சாஸ்தா) ஆலயம்
ஸ்ரீ மணிகண்டேஸ்வரர் சுவாமி ஆலயத்திற்கு அருகிலேயே ஸ்ரீஅய்யனார் தர்ம சாஸ்தா ஆலயம் உள்ளது.
இங்கு ஸ்ரீ அய்யனார் இரண்டு அம்பாள்களுடன்
ஸ்ரீபூர்ணபுஷ்களாம்பிகா சமேத ஸ்ரீஹரிஹரபுத்ர சுவாமியாக அமர்ந்து அருள்பாலித்து வருகின்றார்.
இவ்வூர் முன்னோர்கள், கிராம பரிபாலனம் செய்து வரும் காவல் தெய்வமாகிய ஸ்ரீ அய்யனாருக்கு (ஸ்ரீ தர்ம சாஸ்தாவிற்கு) ஆலயம் அமைக்கத் திட்டமிட்டு ஊர் எல்லையில் கல் ஊன்றினார்களாம். அன்றிரவு கிராமவாசிகளின் கனவில் ஸ்ரீஅய்யனார் தோன்றி “குழந்தை பிறந்த உடன் அழுகுரல் சத்தம், நெல் குத்தும் உரல், உலக்கை சத்தமும் எனக்குக் கேட்க வேண்டும். தாங்கள் ஊன்றிய கல் எங்குள்ளதோ அங்கேயே எனக்கு கோயில் அமையுங்கள்” என்று சொன்னாராம். அதன்படியே மறுநாள் காலையில் அவர்கள் பார்த்தபோது ஊருக்குள்ளேயே ஸ்ரீமணிகண்டேஸ்வர சுவாமி ஆலயத்திற்கு அருகிலேயே கல் ஊன்றப்பட்டு இருந்ததாம். அவ்விடத்திலேயே ஸ்ரீஅய்யனாருக்கு ஆலயம் அமைத்தார்களாம்.
இந்த ஆலயத்திற்கு நிறைமாத கர்ப்பிணியும் வந்து வழிபடலாம். குழந்தைப் பேறின் போது சிரமம் ஏற்பட்டால் இந்த ஆலயத்திலிருந்து விபூதி குங்குமப் பிரசாதம் பெற்று சென்றால் சுகப்பிரசவம் ஏற்படும். மனம் உருகி வேண்டி வழிபட்டால் அனைவரும் சகல சௌபாக்கியங்கள் பெற்று நலமுடன் வாழ்வது கண்கூடு.
வழித்தடம்: கும்பகோணம் To அம்மன்குடி நகரப் பேருந்து எண் 15,15A, மற்றும் தனியார் பஸ் மூலமும் கும்பகோணத்திலிருந்து திருநாகேஸ்வரம், ஸ்ரீஉப்பிலியப்பன் கோயில், அய்யாவாடி, முருக்கங்குடி வழியாக வரலாம்.
நடார் ஆலயங்களுக்கு வந்து தரிசித்து வாழ்வில் உயர்வு பெற்று சகல சௌபாக்கியங்களும் பெற அன்புடன் பிரார்த்திக்கின்றேன்.
அனைவரும் வருக! இறைவன் அருள் பெருக!! வளமோடு வாழ்க!!!
|