SRI GURU BHAIRAVAR
ஸ்ரீகுருபைரவர்
எல்லாவற்றிலும், எல்லா சக்திகளிலும் நீக்கமற நிறைந்து எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி வியாபித்து நிற்பது சிவம்.
மண்ணாய், விண்ணாய், விண்ணிலே தோன்றும் ஆதவனாய், மதியாய், நட்சத்திரங்களாய், ஒளியாய், ஒலியாய் மும்மூர்த்திகளாய் நான்கு வேதங்களாய், ஐந்து பூதங்களாய், ருதுக்களாய், திக்குகளாக விரிந்து பரந்து இருப்பது சிவம்.
உக்ரம், சாந்தம், அன்பு முதலான குணங்களோடு மூர்த்தி வேதங்களாய் நின்று அருள்பாலிப்பது சிவம். ஐந்து முகங்களுடன் ஸ்ரீசிவபெருமான் பல திருவிளையாடல்களைப் புரிந்திருக்கிறார். இது போன்ற பேதங்களில் ஒன்று ஸ்ரீபைரவர். "பராக்யம்" என்ற நூலில் பைரவர் அஷ்ட பைரவராக விவரிக்கப்பட்டுள்ளார்.அஷ்ட பைரவர்களில் இரண்டாவது பைரவர் ஸ்ரீகுருபைரவர் இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீகுருபைரவர் சக்தியாகிய ஸ்ரீமகேஸ்வரியுடன் இணைந்து இவ்வாலயத்தில் அர்த்தநாரீஸ்வரராக ரிஷப வாகனத்தில் அருள்பாலித்து வருகிறார். |
 |
ஸ்ரீசூர்ய பகவானின் மகனான ஸ்ரீசனீஸ்வரன் தனது அண்ணன் யமதர்மனால் அலட்சியப்படுத்தப்பட்டு மனம் புண்பட்டார். தனக்கு நேர்ந்த அவமரியாதையை அவர் தன் தாய் சாயாதேவியிடம் முறையிட்டார். பிறகு தாய் கூறிய அறிவுரைப்படி சனீஸ்வரர், பைரவரை வழிபட்டு அருள்பெற்றதாலேயே அவர் நவக்கிரக பதவியும் ஈசுவரப்பட்டமும் பெற்றார்.
ஸ்ரீபைரவர் ஸ்ரீசனிஸ்வரனுக்கு குருவாக விளங்கி அருள்பாலித்ததால் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஸ்ரீபைரவருக்கு அபிஷேகம் செய்தால் ஏழரை நாட்டுச் சனி, அஷ்டமத்து சனி முதலிய சனீஸ்வர உபாதைகள் முற்றிலும் நீங்கி நல்ல யோக பலன் கிடைக்கும்.
இவரது தோற்றம், இவரது கடைக்கண்பார்வையினால் கர்வம், அகங்காரம், மமதை, தீமை, சூது இருந்த இடம் தெரியாமல் மறையும் .
திருமணமாகாத ஆண்களும், பெண்களும் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் அபிஷேக, அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் கை கூடும்.
ஸ்ரீ குருபைரவர் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
தங்களிடத்தில் பொருள் வேண்டி பிரார்த்திக்கும் பக்தர்களுக்கு பொருள் தருவதற்காக ஸ்ரீஅஷ்ட லெக்ஷ்மிகள் அனைவரும் ஸ்ரீபைரவரிடம் பொருள் வேண்டி பிரார்த்திக்கின்றார்கள். அனைவராலும் ஒதுக்கப்படுகின்ற தினமான அஷ்டமி தினத்தில் ஸ்ரீஅஷ்ட லெக்ஷ்மிகள் ஸ்ரீபைரவரிடம் பிரார்த்திக்கும் போது நாமும் ஸ்ரீகுருபைரவரை வழிபட்டால் நமக்கு ஸ்ரீ குருபைரவர் அருளுடன் அஷ்ட லெக்ஷ்மி கடாட்சமும் கிடைக்கும் தேய்பிறை அஷ்டமியில் தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்தார்.
தேய்பிறை அஷ்டமியில் விரதமிருந்து ஸ்ரீ பைரவரை அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டால் பல நன்மைகள் ஏற்படும் .
மார்கழி மாதம் தொடங்கி பன்னிரெண்டு மாதங்களில் வரும் தேய்பிறை அஷ்டமிகள்.
மாதம் |
தேய்பிறை அஷ்டமிகள் |
மார்கழி |
சங்கராஷ்டமி |
தை |
தேவதா அஷ்டமி |
பங்குனி |
த்ரயம்ப அஷ்டமி |
சித்திரை |
சநாதன அஷ்டமி |
வைகாசி |
சதாசிவ அஷ்டமி |
|
மாதம் |
தேய்பிறை அஷ்டமிகள் |
ஆனி |
பவத அஷ்டமி |
ஆடி |
நீலகண்ட அஷ்டமி |
ஆவணி |
ஸ்தாணு அஷ்டமி |
புரட்டாசி |
சம்புக அஷ்டமி |
கார்த்திகை |
ருத்ர அஷ்டமி |
|
இத்திருக்கோயிலில் ஸ்ரீ குருபைரவர் ரிஷப வாகனத்தில் அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலித்து வருவதால் தேய்பிறை அஷ்டமியில் தேன், பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் எமபயம் நீங்கும், மூளை நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும். தொழில், வியாபாரம், உத்தியோகம், வழக்கு வியாஜ்யங்களில் தடை நீங்கி வெற்றி பெறலாம். கடன் தொல்லைகள், எதிரிகள் பயம் நீங்கி நீண்ட ஆயுள் பெற்று ஆரோக்கியத்துடன் வாழலாம்.
|
|
|