Home About Temple Sri NADAR IyYANAR About ambal Sri Sarpparasi Thakshina moorthy Sri Guru Bhairavar Gallery Contact us

SRI SARPPARASI THAKSHINA MOORTHY

ஸ்ரீசர்ப்ப ராசி தட்சிணாமூர்த்தி
குணமிகு வியாழ குருபகவானே
மணமோடு வாழ மகிழ்வுடன் அருள்வாய் !
பிரகஸ்பதி வியாழ பரகுரு நேசா
கிரகதோஷமின்றி கடாட்சித் தருள்வாய்!

இந்த ஆலயத்தில் ஸ்ரீமணிகண்டேஸ்வர ஸ்வாமியின் தென்புறத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகுருபகவான் (ஸ்ரீதட்சிணாமூர்த்தி) 12 ராசிகளின்நவக்கிரஹங்களால் ஏற்படுகின்ற அனைத்து தோஷங்களையும் பாவங்களையும் வேறோடு நீக்கி அருள்புரிந்து வருகிறார்.

குரு என்றால் அறியாமை என்னும் இருளை அகற்றி நல்வழிப்படுத்துபவர் என்று பொருள்.

ஸ்ரீசிவபெருமான் ஆலமரத்தின் கீழ் தெற்கு முகமாக அமர்ந்து பிரம்ம ரிஷிகளான ஜனந்தர், ஜனாதரர், ஜனலந்தர், ஜனத்குமாரர் ஆகிய ஜனத்குமாரர்களுக்கு தியானம் செய்வது பற்றி போதித்ததால் ஸ்ரீசிவபெருமானுக்கு ஸ்ரீதட்சிணாமூர்த்தி, தென்முகக்கடவுள், ஆலமரக்கடவுள் என்ற பெயர் ஏற்பட்டது.

இந்த ஆலயத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி தனது வலது கையில் ருத்ராட்ச மாலைக்குப் பதிலாக சர்ப்பத்தை (பாம்பு) வைத்து ஸ்ரீசர்ப்ப ராசி தட்சிணாமூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.

தேவலோகத்தில் ஒருமுறை குழப்பம் ஏற்பட்டு தேவேந்திரன் தேவலோகத்திலிருந்து வெளியே வந்தவுடன் அந்தப் பதவியை அடைய நகுஷன் என்ற அசுரன் தேவலோகம் செல்கிறான். ஆனால் அவன் இந்திரன் மனைவியைக் கவரும் தவறான நோக்கத்தில் வந்ததை அறிந்த தேவர்கள் யாவரும் ஸ்ரீசிவபெருமானிடம் முறையிட்டார்கள். அப்பொழுது ஸ்ரீசிவபெருமான் நகுஷனை சம்ஹாரம் செய்யாமல் சம்ஸ்வீகாரம் செய்து அவனை பாம்பாக்கி தனது வலது கையில் ருத்ராட்ச மாலைக்குப் பதிலாக இந்த ஆலயத்தில் வைத்துக் கொண்டதால் இவருக்கு
ஸ்ரீசர்ப்ப ராசி தட்சிணாமூர்த்தி என பெயர் ஏற்பட்டது. இவருடைய அருகிலேயே பாம்புப் புற்றும் உள்ளது.

நடார் ஸ்ரீசர்ப்ப ராசி தட்சிணாமூர்த்திக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் செல்வம் மேன்மேலும் வளரும், எமபயம் நீங்கும், எதிரிகள் பயம் நீங்கும், வித்தையில் வல்லவனாகலாம், நினைத்த காரியம் நிறைவேறும், திருமணத்தடை நீங்கும், புகழ் மேன்மேலும் ஓங்கும், சகல வியாதிகளும், தோஷங்களும், பாவங்களும் நீங்கும். தொழில், வியாபாரம், உத்யோகம் ஆகியவைகளில் உள்ள தடைகள் நீங்கும், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம்.

பிரதி வியாழன் தோறும் காலை 11 மணிக்கு பரிகார சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் நடைபெறும்.

இங்கு ஸ்ரீ சர்ப்ப ராசி தட்சிணாமூர்த்தி ஸ்ரீசிவபெருமானும் ஸ்ரீஅம்பாளும் சேர்ந்து ஸ்ரீ தாம்பத்ய தட்சிணாமூர்த்தி உருவமாக காட்சி அளிக்கின்றார்.